Home இலங்கை நாட்டைவிட்டு வெளியேற முற்பட்ட பசில் ராஜபக்ஸ, கடும் எதிர்ப்பால் வீட்டுக்கு திரும்பினார்!

நாட்டைவிட்டு வெளியேற முற்பட்ட பசில் ராஜபக்ஸ, கடும் எதிர்ப்பால் வீட்டுக்கு திரும்பினார்!

by admin

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோதும், அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று அதிகாலை அவர், வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க வானுார்தி நிலையத்துக்கு சென்றபோது, அவரின் ஆவணங்களை பரீட்சிப்பதற்கு குடிவரவுத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். அத்துடன் விமான நிலையத்தில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதன்போது குடிவரவு அதிகாரிகள், தமது கடமைகளை புறக்கணித்தமையை அடுத்து, பசில் ராஜபக்ச மீண்டும் நாட்டுக்குள் திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More