Home இலங்கை யாழில் வன்முறை கும்பல்களுக்கு இடையில் வாள் வெட்டு

யாழில் வன்முறை கும்பல்களுக்கு இடையில் வாள் வெட்டு

by admin

யாழில் இயங்கும் வன்முறைக் குழுக்கள் ஒன்றின்  தலைவர் என கூறப்படும் நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயங்களுக்குள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று காவல்துறையினா் கூறினர். 
10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தியவர்களில் ஐவர் கைது செய்யப்பட்டதுடன் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.


தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அண்மையாக இன்றைய தினம் திங்கட்கிழமை நண்பகல் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு வாள் வெட்டுக்கு இலக்கான நபர் சென்று திரும்பிய போதே  வீதியில் நின்ற 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்துள்ளது.


சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதலின் போது வாள் ஒன்று உடைவடைந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களில் அளவெட்டியைச் சேர்ந்த ஐவர் தெல்லிப்பழை காவல்துறையினாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையிலான முறுகல் நிலையே இந்த வாள்வெட்டுத் தாக்குதலுக்கு காரணம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் காவல்துறையினா் கூறினர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More