Home இலங்கை இலங்கை நெருக்கடி – அமெரிக்காவும் இந்தியாவும் உயர்மட்ட கலந்துரையாடல்!

இலங்கை நெருக்கடி – அமெரிக்காவும் இந்தியாவும் உயர்மட்ட கலந்துரையாடல்!

by admin

இலங்கையின் நெருக்கடி நிலைமை குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன் இலங்கையின் நிலைமை குறித்து கலந்துரையாடினார்.

ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் தாக்கங்கள், இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து விவாதித்ததாக பிளின்கன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கம்போடியாவில் உள்ள புனோம் பென் நகரில் அமெரிக்க – ஆசியான் அமைச்சர்கள் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஆசியான் பிராந்திய மன்றம் ஆகிய கூட்டங்களின் பக்க சந்திப்பாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More