Home இலங்கை பெருமளவிலான வெடிமருந்து மீட்பு

பெருமளவிலான வெடிமருந்து மீட்பு

by admin

மட்டக்களப்பு – கரடியனாறு மற்றும் சந்திவெளி காவல்துறைப் பிரிவிலுள்ள சின்ன புல்லுமாலையில் புதைத்து வைக்கப்பட்டிந்த வெடிமருந்துகளும், புலிபாய்ந்தகல் காட்டுப்பகுதியில்   ரி-56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 8  ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று புதன்கிழமை (12) மாலை  விசேட அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் இணைந்து இவற்றினை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சின்ன புல்லுமலை வயல்பகுதியில் வயல் ஒன்றினை உழுதபோது பரல் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்ட வெடிபொருட்கள் இருப்பதை கண்டு காவல்துறையினருக்கு அறிவித்ததனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினா் பெருமளவிலான வெடி மருந்துகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட வெடி மருந்துக்களை நீதிமன்ற உத்தரவினை பெற்று செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கரடியனாறு காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

குறித்த பகுதி முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More