Home உலகம் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவா்கள் போசாக்கின்மையால் உயிரிழக்கும் அபாயம்

5 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவா்கள் போசாக்கின்மையால் உயிரிழக்கும் அபாயம்

by admin

சோமாலியாவில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவா்கள் போசாக்கின்மையால் உயிரிழக்கும் அபாய நிலை ஏறப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அங்கு வறட்சி மற்றும் மோதல்கள் காரணமாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சோமாலியாவின் இரண்டு பிராந்தியங்களில் வாழும் மக்கள் முழுமையாக பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பைடோ (Baidoa )மாவட்டத்தில் உள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் ஐ.நா முகவர் அமைப்பு மற்றும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்த நிலமை தெரியவந்துள்ளது.

6 வயது முதல் 59 மாதங்களுக்கு இடைப்பட்ட 98 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களில் 59% மானோா் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More