Home இலங்கை மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை

மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை

by admin

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினரால்  இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(6) காலை சிரமதான பணிகள் இடம் பெற்றது.

எனினும் அங்கு சென்ற அடம்பன் காவல்துறையினா்  சிரமதானம்  மேற்கொண்டமை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தோடு,   மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

 மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(6) காலை சிரமதான பணிகள் இடம் பெற்றது.  

எதிர்வரும் 27ஆம் திகதி (27-11-2022) மாவீரர் தின நினைவேந்தல் இடம் பெறவுள்ள நிலையில் வடக்கு,கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதானம் செய்யப்பட்டு,மாவீரர்களின் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு,இறுதி நாளான எதிர்வரும் 27ஆம் திகதி மாலை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும்.

-இந்த நிலையில் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(6) காலை சிரமதான பணிகள் இடம் பெற்றது.குறித்த சிரமதான நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

சிரமதானம் முடியும் நிலையில் துயிலும் இல்ல பகுதிக்கு வந்த அடம்பன் காவல்துறையினா் சிரமதானம்  மேற்கொண்டமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டதோடு, எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.என தெரிவித்து அடம்பன் காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல்துறைக் குழுவினர் அங்கிருந்து சென்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More