Home இலங்கை மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் எச்சங்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன!

மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் எச்சங்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன!

by admin

முல்லைத்தீவு – உடையார்கட்டு குரவில் கிராமத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள், முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் மனித எச்சங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நகர்த்தல் பத்திரத்தினூடாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, மனித எச்சங்கள் தொடர்பான தடயவியல் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  நேற்று(30.11.22) மாலை மீட்கப்பட்ட மனித எச்சங்கள் சுமார் 20 வருடங்களுக்கு முந்தையதாக இருக்கக்கூடும் எனவும்  சந்தேகிப்பதாக காவற்துறையினர்  கூறியுள்ளனர்.

உடையார்கட்டு – குரவில் பகுதியில் தனியார் காணியொன்றில் கடந்த 20ஆம் திகதி மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதற்கு அமைய, மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் நேற்று(30.11.22) மாலை குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் உடல் எச்சங்கள் மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் விடுதலைப்புலிகளுடையது என இனம் காணப்பட்ட மனிதர்களின் முன்று வகையான எலும்பு எச்சங்கள் நேற்று  30.11.22 மீட்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு காவற்துறைப்  பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியினை பண்படுத்தும் போது கடந்த 20.11.22 அன்று மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன.

இது குறித்து புதுக்குடியிருப்பு காவற்துறை  நிலையத்தினால் நீதிமன்றில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நேற்று  30.11.22 தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி றொகான் தடையவியல் பொலீசார்,கிராம அலுவலகர், காவற்துறையினர் ஆகியோர் முன்னிலையில் தோண்டப்பட்டுள்ளது.

இதன்போது முன்று வகையான மனித எச்சங்களின் மாதிரிகள், நிலத்தில் தறப்பாளால் சுற்றப்பட்ட நிலையில்  மீட்கப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மனித எச்சங்களுடன் துப்பாக்கி ரவைகள் மற்றும் உடைகள், என்பன காணப்பட்டுள்ளன விடுதலைப்புலிகளின் சயனட், இலக்கத்தகடு என்பனவும் இதன்போது குறித்த பகுதியில் இருந்து மீட்னப்பட்டுள்ளன.

அதில் ஒரு சயனைட் முழுமையாகவும் மற்றைய இரட்டை சயனட்டுகள் பாதியாகவும் காணப்பட்டுள்ளதுடன் செபமாலை ஒன்றும் இலக்கத்தகட்டில் (ஞ) என இலக்கம் தொடங்குகின்றது

ஜீன்ஸ்,சேட் மற்றும் பெண்களின் உள்ளாடையுடன் ஒரு எச்சமும்,மற்றுமோர் எச்சம் சிறுவர்களுடையது என்றும் மற்றும் ஒன்று பெரியவரின் உடையது எனவும் இனம் காணப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் எறிகணை ஒன்றின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மனித எச்சங்களை சட்டவைத்திய அதிகாரி மரபணுசரிசோதனையின் பின்னர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பணித்துள்ளார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More