Home இலங்கை இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்து பேசினர்!

இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்து பேசினர்!

by admin

இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்தியாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த வேளையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக, இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ட்விட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சருடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை மேற்கொள்ள முடிந்ததாக அமைச்சர் அலி சப்ரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை குறித்தும் அங்கு மீளாய்வு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More