Home இலங்கை இளம் பெண் கொலை நாற்றுகளை பிடிங்கி, கொலைஞரைக் கட்டிக்கொடுத்த “ஏகல்”!

இளம் பெண் கொலை நாற்றுகளை பிடிங்கி, கொலைஞரைக் கட்டிக்கொடுத்த “ஏகல்”!

by admin

கண்டி அலவத்துகொடவில் அண்மையில் இடம்பெற்ற திருமணமான 27 வயதான இளம் பெண்ணின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய   கொலையாளியான இராணுவ சிப்பாயை கண்டுப்பிடிப்பதற்கு வயல்வெளியில் இரண்டு  நாற்றுக்களை பிடுங்கி  ‘ஏகல்’ வழிகாட்டியது  என அஸ்கிரிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலையாளியை கண்டுபிடிப்பதற்காக, களத்தில் இறக்கப்பட்ட காவற்துறை மோப்ப நாயான “ஏகல்” வயல்வெளியில் இரண்டு நாற்றுக்களை பிடுங்கியதன் பின்னர் வழங்கிய துப்பின் மூலமே ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ய முடிந்தது என காவற்துறையினர்  குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு நாற்றுக்களை பிடுங்கிய காவற்துறை நாயான ‘ஏகல்’ மலைகளை கடந்து நான்கு கிலோமீற்றர் மிகவும் கடுமையான பயணத்தை மேற்கொண்டு, சந்தேகநபரின் வீட்டுக்குள் நுழைந்ததாக, கண்டி, மோப்பநாயை வழிநடத்திய அஸ்கிரிய காவற்துறை மோப்பநாய் பிரிவின் காவற்துறை கான்ஸ்டபிள் பீ.ஜி. ஜயரத்ன கூறியுள்ளார்.

அது குறித்து மேலும் விளக்கிய அவர், இந்த பெண்ணின் சடலம், வயலில் சேற்றுக்குள் அமிழ்த்தப்பட்டு, அதன்மேல் நாற்றுகள் நாட்டப்பட்டுள்ளமை முதலில் கண்டறியப்பட்டது. களத்தில் இறக்கப்பட்ட மோப்பநாய் இரண்டு நாற்றுகளை பிடுங்கி  துப்பு கொடுத்தது. அதன்பின்னர் தன்னையும் இழுத்துக்கொண்டு வயலுக்குள் சென்று, வயலில் இருந்து மேலேறியது. பின்னர் தேயிலைத்தோட்டத்துக்குள் புகுந்த ‘ஏகல்’ தன்னையும் இழுத்துக்கொண்டே மேடுகளில் ஏறி, பள்ளங்களில் இறங்கி சுமார் நான்கு கிலோமீற்றருக்கு அப்பால் சென்று வீடொன்றுக்கு முன்பாக நின்றுக்கொண்டது.

அந்த வீட்டுக்கு முன்பாக நின்றிருந்த நபரொருவரை கடந்து சென்ற ‘ஏகல்’  அந்த வீட்டை ஒரேயொருமுறை சுற்றிவந்து வீட்டுக்குள் புகுந்துகொண்டது.

வீட்டுக்குள் புகுந்துகொண்ட ‘ஏகல்’, தன்னையும் இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓர் அறைக்குள் சென்று, அங்கிருந்த கட்டிலை முகர்ந்துகொண்டே அதன் கீழே அமர்ந்துகொண்டது. அதன்பின்னரே, அவ்வீட்டில் இருந்த இராணுவ சிப்பாய், சந்தேகத்தின் பேரில் அலவத்துகொட காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த காவற்துறை மோப்ப நாயான ‘ஏகல்’ இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் பல குற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கான துப்பை துலங்கியுள்ளது என்றும் கண்டி அஸ்கிரிய காவற்துறை  மோப்பநாய் பிரிவு அறிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More