Home இலங்கை நீரில் அடித்துச் செல்லப்பட்ட அண்ணனும் தங்கையும் சடலங்களாக மீட்பு

நீரில் அடித்துச் செல்லப்பட்ட அண்ணனும் தங்கையும் சடலங்களாக மீட்பு

by admin

பதுளை – ஹாலி எல போகொட பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட அண்ணனும் தங்கையும்  சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நீரில் அடித்துச்செல்லப்பட்ட 10 வயது சிறுவன் இன்று முற்பகல்  சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலிருந்து  சடலமாக மீட்கப்பட்டதாக    காவல்துறையினா் தொிவித்துள்ளனா். குறித்த சிறுவனின் 07 வயதான தங்கை, நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டிருந்தாா்.

காவல்துறையினரும் பிரதேச மக்களும் இணைந்து  தேடுதல் பணிகளில் ஈடுபட்ட நிலையில், சடலங்கள்  மீட்கப்பட்டுள்ளன.  இருவரது சடலங்களும்    நீதவான் விசாரணைகளின் பின்னர் பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்  ஹாலி எல  காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More