Home இலங்கை 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

by admin

களுத்துறை பிரதேசத்தில் 16 மாணவிகளை   பாலியல் துஸ்பிரயோக்துக்குட்பபடுத்தியதாக  தொிவித்து  தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவா்  இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் வாக்குமூலம்   வழங்குவதற்காக களுத்துறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு  சென்ற போதே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சிறுமிகளை  துஸ்பிரயோக்துக்குட்படுத்திய போது எடுக்கப்பட்ட 16 வீடியோ பதிவுகள் குறித்து தெரிய வந்துள்ளதாகவும், அவற்றை அவதானித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை கண்டறிந்து  மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் களுத்துறை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை வடக்கு காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகத்திற்குரிய குறித்த  ஆசிரியர் வேறு இடங்களில் சிறு குழுக்களாக வகுப்புகளை நடத்தி வரும் நிலையில்  அங்கும் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More