Home உலகம் பிரித்தானிய பிரதமரின் அலுவலக வாயிலையும் கார் மோதியது!

பிரித்தானிய பிரதமரின் அலுவலக வாயிலையும் கார் மோதியது!

by admin

பிரித்தானிய பிரதமரின் அலுவலகம் அமைந்துள்ள டவுனிங் தெரு வாயில் மீது கார் மோதியதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிமினல் சேதம் மற்றும் ஆபத்தாக வாகனம் ஓட்டியதற்காக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார், ஆனால் இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக கருதப்படவில்லை என பெருநகர காவற்துறை தெரிவித்து்ளது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் இந்தக் கார் மோதியபோது டவுனிங் தெருவில் பிரதமர் ரிஷி சுனக் இருந்ததனை பிரமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரதமர் வதிவிடம் அமைந்துள்ள பகுதி ஊடாகச் செல்லும் பல அரசு அலுவலகங்களின் மையப்பகுதி வழியாக விளங்கும் பிரதான சாலையான ஒயிட்ஹாலில் (Whitehall) உள்ள பகுதி, மாலை 4.20 மணியளவில் அதிக மக்கள் நடமாட்டம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வேளையில் வீதியில் சென்ற ‘சில்வர் கியா’ (silver Kia ) ரகக் கார் ஒன்று அலுவலக வாயில் இரும்பு வேலி மீது மோதியது. கார் மோதிய சத்தத்தை பகுதியளவான மக்கள் அந்தப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முழுமையான சோகனையின் பின் அந்த சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டு, காவற்துறை சுற்றிவளைப்பு அகற்றப்பட்டது. இரவு 19:45 மணியளவில் கார் காவற்துறை மீட்பு வாகனத்தில் ஏற்றப்பட்டு சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டது.

காவற்துறை அதிகாரிகள் வாகனத்தை சோதனை செய்த போது காணப்பட்ட கையடக்க தொலைபேசியை மீட்டதுடன் தடயவியல் அதிகாரிகள் காரை சோதைனையிட்டதுடன், மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்க்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More