Home இலங்கை பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெரு சுப்பிரமணியம் மீது வாள்வெட்டு!

பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெரு சுப்பிரமணியம் மீது வாள்வெட்டு!

by admin

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் இளைஞன் ஒருவர் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் மீது இனம் தெரியாத நபர்கள் வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியம் 50 வயதுடைய சுகுமார்  என்பவர் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த 33 வயதுடைய  தியாகராசா சந்திரதாஸ் எனும் இளைஞன் கடந்த 28ஆம் திகதி அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மூன்றாம் குறுக்கு தெருவில்  சுகுமார் என்பவரின் வீட்டுக்கு வெளியே அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் சுகுமாரின் வீட்டிற்குள், அத்துமீறி நுழைந்த மூவர் கொண்ட குழு சுகுமார் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

உயிரிழந்த இளைஞன் இரவு எதற்காக அந்த வீட்டுக்கு அருகில் சென்றார் என்பது தொடர்பில் பருத்தித்துறை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் நடாத்தி உள்ளமை காவற்துறையினருக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக  விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More