Home இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலையில் கல்வி கற்கும்  யாழ் மாணவர்  சடலமாக மீட்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலையில் கல்வி கற்கும்  யாழ் மாணவர்  சடலமாக மீட்பு

by admin

 

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்  யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த மாணவர் ஒருவர்   சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையை சேர்ந்த 23 வயதான மாணவா் ஒருவரே இவ்வாறு   சடலமாக மீட்கப்பட்டுள்ளார்    மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின் கீழ் தளத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக  காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர். குறித்த  விடுதியில்  சுமாா்  64 மாணவர்கள் தங்கி இருந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

மேலும்  மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து,  அவரது  உறவினர்கள் நீதவான் விசாரணையை கோரியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மஹரகம   காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More