Home இலங்கை இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதும் அவசியம்!

இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதும் அவசியம்!

by admin

இந்த வருட இறுதிக்குள் இலங்கை தனது பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்துவதும் இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதும் அவசியம் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது வெளிநாட்டுகடன்களை செலுத்துவதை இடைநிறுத்தியுள்ளது, பல பொருட்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்தியுள்ளது,  இவை இலங்கை செய்துள்ள உடன்படிக்கைகளிற்கு எதிரானது. குறிப்பாக இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளதாலேயே உலக நாடுகள் இதற்கு இணங்கியுள்ளன என  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மூன்று நான்கு வருடங்களா இலங்கை  வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவில்லை இதனைத்  தொடரமுடியாது கடந்த 18 மாதங்களாக எங்கள் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவித்துள்ள இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் பொருளாதாரஸ்திரதன்மைக்கான ஆரம்பநிலையை இலங்கை காண்கிறது எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பணவீக்கம் அதிகரிக்காத வகையில் வட்டிவீதங்களை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு மத்திய வங்கி முயல்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் எரிபொருளிற்கான தேவை குறைக்கப்பட்டுள்ளது இது செயற்கையான விதத்தில் முன்னெடுக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டதும் இலங்கை  புதியசவால்களை எதிர்கொள்ளும். கட்டுப்பாட்டு சூழலை இந்த வருட இறுதிக்குள் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும், அதன் பின்னரே இலங்கை நாணயத்தின் உண்மையான பெறுமதி தெரியவரும் எனவும்  தெரிவித்துள்ள அவர் நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சி அவசியம் என வலியுறுத்தி உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More