Home இலங்கை புதுக்குடியிருப்பில், கவனயீர்ப்பு போராட்டம்!

புதுக்குடியிருப்பில், கவனயீர்ப்பு போராட்டம்!

by admin

அரசின் அஸ்வெசும கொடுப்பனவை வழங்குமாறு கோரி வீதிக்கு இறங்கிய மக்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட உடையார் கட்டு சமுர்த்தி வங்கிக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாறு, உடையார்கட்டு, குரவில், தேராவில்,கிராங்களை சேர்ந்த மக்கள் இவ்வாறு இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் போராட்டத்தின்போது, “ஏழைகள் வாழ்வில் ஏழனம் செய்யாமல் எங்களை உள்வாங்கு, அரசே அஸ்வெசும திட்டத்தில் அனைவரையும் உள்வாங்கு, ஜனாதிபதியே தகுதியான எங்களையும் உள்வாங்கு” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பினை மேற்கொண்டதாக எமது செய்தியாளா் தொிவித்தாா்.

கவனயீர்ப்பினை தொடர்ந்து கிராம மட்ட அமைப்புக்களை சேர்ந்த சிலர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் சென்று அங்கு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்திடம் மக்களின் கோரிக்கை அடங்கிய மனுவினை கையளித்தனர்.

இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடமும் மனுவினை கையளித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More