Home இலங்கை கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

by admin

 

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை பேசியதனை தட்டிக்கேட்டவரின் கழுத்தில் கத்தி  வைத்து மிரட்டியதால்தான் பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“நேற்று பகல் யாழ்ப்பாணம் நகர பழக்கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இழுத்து ஏற்றி கடத்திச் செல்லப்பட்டார். அவரை கடத்திச் சென்றவர்கள் உள்ளாடையுடன் வைத்து கடுமையாகத் தாக்கி காணொளி பதிவு செய்துள்ளனர். படுகாயப்படுத்திவிட்டு அவரை கைவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பித்தனர்.

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பழக்கடை வியாபாரியினால்  காவல்நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களிலேயே பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய நால்வரும் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், கத்தி மற்றும் காணொளிப் பதிவு செய்த விலை உயர்ந்த அலைபேசி என்பன கைப்பற்றப்பட்டன.

குறித்த பழக்கடை வியாபாரி  பழம் வாங்கச் சென்ற பெண் ஒருவருடன் தகாத வார்த்தையால் பேசியுள்ளார். அதுதொடர்பில் கேட்கச் சென்றவரின் கழுத்தில் கத்தியை வைத்து பழக்கடை வியாபாரி மிரட்டியுள்ளார். அதனால்தான் அவரை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தினோம் என்று சந்தேக நபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்” என்று  காவல்துறையினர்  தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More