Home இலங்கை அளவெட்டியில் அரிசி ஆலையில் தீ ; பல இலட்ச ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதம்

அளவெட்டியில் அரிசி ஆலையில் தீ ; பல இலட்ச ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதம்

by admin

யாழ்ப்பாணத்தில் அரிசி ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் , ஆலை இயந்திரங்கள் ,தளபாடங்கள் உள்ளிட்ட பல இலட்ச ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.  அளவெட்டி வடக்கில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அரிசி ஆலை தீ பிடித்ததும் , உரிமையாளர் அயலவர்கள் உதவியுடன் , தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதிலும் , தீ வேகமாக பரவியதால் இயந்திரங்கள் , தளபாடங்கள் என்பன தீயில் எரிந்துள்ளன.  சம்பவம் தொடர்பில்  தெல்லிப்பழை   காவல்துறையினப்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More