Home இலங்கை கிளிநொச்சியில் காவல்துறைஅதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கிளிநொச்சியில் காவல்துறைஅதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

by admin

 

கிளிநொச்சி – மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபடுபவர்களை சுற்றிவளைக்கச் சென்ற   காவல்துறை அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மலையாளபுரம் – புது ஐயங்கன் குள பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நடைபெறுவதாக கிளிநொச்சி  காவல்துறையினருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலையடுத்து, இன்று காலை   கிளிநொச்சி  காவல்நிலையத்தை சேர்ந்த 3  காவல்துறையினா்   குறித்த இடத்தை சுற்றிவளைப்பதற்காக சென்ற நிலையில் அவா்களில்   ஒருவர் காட்டுப் பகுதியில் இருந்து வௌியே வரவில்லை.

இதனையடுத்து  காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர்  இணைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் காணாமல் போன  காவல்துறை அதிகாரியை  தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடர்ந்த காடு என்பதனால், உள்ளே என்ன நடந்தது என்பது  குறித்து  தமக்கு  தெரியவில்லையென கிளிநொச்சி  காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More