Home இலங்கை டிப்பர் வாகனத்தினால் யாழில். ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி உயிரிழப்பு.

டிப்பர் வாகனத்தினால் யாழில். ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி உயிரிழப்பு.

by admin

ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி , டிப்பர் வாகனத்தினால் ஏற்படுத்தப்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.   யாழ்ப்பாணம் – நீர்வேலி மேற்கைச் சேர்ந்த தனபாலசிங்கம் மகேஸ்வரி (வயது 72)  என்பவரே உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பொங்கல் நிகழ்வில் மூதாட்டி ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை, வீதியில் வேகமாக வந்த டிப்பர் வாகன , வேக கட்டுப்பாட்டை இழந்து ஆலயத்திற்கு அருகில் நின்ற வாகனத்தை மோதியதில் , அந்த வாகனம் பொங்கலில் ஈடுபட்டிருந்தவர் மீது மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில், 30 வயதான டிப்பர் சாரதியை கைது செய்துள்ள கோப்பாய்  காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More