Home இலங்கை பரதநாட்டியத்தை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்தவருக்கு எதிராக போராட்டம்!

பரதநாட்டியத்தை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்தவருக்கு எதிராக போராட்டம்!

by admin

பரதநாட்டியத்தினையும், அதை பயிற்சி செய்பவர்களையும் இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்த இஸ்லாமிய மதகுரு அப்துல் ஹமீட்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அராலி பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் அராலி பகுதியை சேர்ந்த பரதம் கற்கும் மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் இணைந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்தில் உருத்திர சேனை மற்றும் சிவசேனையை சேர்ந்தோரும் பங்கேற்று இருந்தனர்.

தமிழர்களுடைய பாரம்பரிய கலைகளை இழிவுபடுத்துபவர்கள், தமிழரின் வழிபாட்டு முறை, வாழ்வியல், கலை, கலாச்சாரத்தினை கொச்சைப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டோர் கோரினர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More