Home இலங்கை யாழில். காவற்துறை காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு – இருவர் கைது!

யாழில். காவற்துறை காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு – இருவர் கைது!

by admin

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை காவற்துறை காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள காவலரண் மீதே நேற்றைய தினம் புதன்கிழமை (10.01.24) இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்ற இருவரை காவற்துறையினர் துரத்தி சென்று பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்கள் எனவும், இருவரையும் காவற்துறை  நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தையும், தீவகத்தையும் இணைக்கும், மண்டைதீவு சந்தியில் காவற்துறை  காவலரண் காணப்படுவதனால் தீவக பகுதிகளில் இருந்து சட்டவிரோத இறைச்சிகள், போதைப் பொருட்கள் என்பவற்றை யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More