Home இலங்கை யாழ்.வரணியில் ஆலயத்திற்கு அருகில் மாட்டிறைச்சியை வீசி சென்ற விஷமிகள்!

யாழ்.வரணியில் ஆலயத்திற்கு அருகில் மாட்டிறைச்சியை வீசி சென்ற விஷமிகள்!

by admin

மாடொன்றை கொலை செய்து இறைச்சியாக்கி , அதன் கழிவுகளை ஆலயத்திற்கு அருகில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கொடிகாமம், வரணி பகுதியில் உள்ள ஆலயமொன்றிற்கு அருகில் உள்ள வெறும் காணிக்குள் கட்டாக்காலி மாடொன்றினை இறைச்சியாக்கிய விஷமிகள், அதன் கழிவுகளை அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

ஆலய வழிபாட்டிற்கு சென்றவர்கள் துர்நாற்றம் வீசுவதை அவதனித்து , அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்ட போதே, மாட்டின் இறைச்சி கழிவுகள் காணப்பட்டுள்ளன.

ஆலயத்திற்கு அருகில் மாடொன்றினை இறைச்சியாக்கிய சம்பவம் ஆலய பக்தர்கள் இடையில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More