Home இலங்கை ஐக்கிய மக்கள் சக்தியின்  ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக நீர்த்தாரைப் பிரயோகம்

ஐக்கிய மக்கள் சக்தியின்  ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக நீர்த்தாரைப் பிரயோகம்

by admin

 

ஐக்கிய மக்கள் சக்தியின்  ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு பொது நூலகத்திற்கு அருகாமையில் காவல்துறையினர் பல முறை நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை  மேற்கொண்டுள்ளனா். மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு  உரிய தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்   போது காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக க தொிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருக்கு மூன்று நீதவான் நீதிமன்றங்களினால் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More