Home இலங்கை ஜனாதிபதியின் பரிந்துரையை, அரசியலமைப்புப் பேரவை நிராகரித்தது!

ஜனாதிபதியின் பரிந்துரையை, அரசியலமைப்புப் பேரவை நிராகரித்தது!

by admin

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷ்சங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்திருந்த பரிந்துரையை அரசியலமைப்புப் பேரவை நிராகரித்துள்ளது.

இந்த நிராகரிப்புக்கான காரணத்தை தெரிவித்து, அரசியலமைப்புப் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிஷ்சங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கும் பரிந்துரையை ஜனாதிபதி, கடந்த வாரம் அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பி இருந்தார்.

ஜனாதிபதியின் இந்த பரிந்துரையை ஆராய அரசியலமைப்புப் பேரவை கடந்த 30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது.

இதன் போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் ஆகியோர் ஜனாதிபதி பரிந்துரைக்கு அனுமதி வழங்கினர். எனினும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More