Home இலங்கை நித்திரையில் தடையுத்தரவை வழங்கிய இலங்கை காவற்துறை!

நித்திரையில் தடையுத்தரவை வழங்கிய இலங்கை காவற்துறை!

by admin

சுதந்திர தினத்தை எதிர்த்து மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரிநாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்த  இன்னால் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிகளின் அமைப்பாளர் சமூக செயற்பாட்டளாகள் 17 பேருக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை (03.02.24) பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை காவற்துறையினர்  இரவோடு இரவா உரியவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கியுள்ளனர்.

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினமான பெப்பிரவரி நாடு பூராகவும் கொண்டாடும் நிலையில் வடக்கு கிழக்கில் அதனை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் பாரிய ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்கு வலிந்து காணாமல் போன உறவுகளின் சங்கங்கள் மற்றும் சில அரசியல்கட்சிகள் ஆதரவு வழங்குவதாக அறிவித்தன.

இந்த நிலையில் மட்டக்களப்பில் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற இருந்த நிலையில் மட்டு. வெபர் மைதானத்தில் சுதந்திர தின விழா இடம்பற்றது.

இந்நிலையில் கரிநாள் ஆர்ப்பாட்ட பேரணிக்கு முன்னின்று செயற்படும் இன்னால் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் மற்றும் சமூகசெயற்பாட்டளர்கள் 17 பேருக்கு எதிராக காவற்துறையினர்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தடை உத்தரவு கோரியதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு கட்டளை ஒன்றை பிறப்பித்தது.

இந்த தடை உத்தரவை பெற்ற காவற்துறையினர்  குறித்த 17 பேரின் வீடுகளுக்கு இரவோடு இரவாக சென்று நித்திரையில் இருந்தவர்களை தட்டியெழுப்பி தடை உத்தரவை வழங்கியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More