Home இலங்கை மாகாணங்களுக்கான கல்வி அதிகாரமும் மத்திய அரசின் கீழ் வருகிறது?

மாகாணங்களுக்கான கல்வி அதிகாரமும் மத்திய அரசின் கீழ் வருகிறது?

by admin

இலங்கையில் உள்ள  மாகாண சபை பாடசாலைகள் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (12.03.24) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் மாகாண பாடசாலைகள், தேசியப்பாடசாலைகள் என்ற இருவகையான பாடசாலை முறைமைகள் உள்ளன.

தேசிய பாடசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழும், மாகாணப் பாடசாலைகள் மாகாண சபையின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றமை.

மாகாணசபைகளுக்கான அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில் கல்வியும் முழுமையாக  மத்திய அரசின்கீழ் கொண்டுவரப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More