Home இலங்கை “கணவரின் சாவுக்கு காரைநகர் கடற்படையும் காரணம்”

“கணவரின் சாவுக்கு காரைநகர் கடற்படையும் காரணம்”

by admin

தனது கணவரின் சாவிற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என உயிரிழந்த இளைஞனின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

காரைநகர் பகுதிக்கு கணவன் மனைவி சென்று விட்டு திரும்பும் வழியில், கணவன் மனைவியை கடத்தி சென்ற வன்முறை கும்பல் கணவனை படுகொலை செய்துள்ளது.

இது தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில் ,

காரைநகருக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் நானும் எனது கணவரும் வீடு திரும்பும் வேளையில், பொன்னாலை பாலத்திற்கு அருகில் எம்மை வழிமறித்த கும்பல் வாகனத்தில் தம்மை கடத்த முயற்சித்தனர்.

அவ்வேளை, தானும் கணவரும் அவர்களிடம் தப்பித்து அருகில் இருந்த கடற்படை முகாமிற்குள் தஞ்சம் புகுந்ததாகவும், கடற்படையினர் தம்மை அங்கிருந்து விரட்டினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

தங்களை கடத்த போறாங்க , தங்களை காப்பாற்றுங்க என கடற்படையிடம் மன்றாடியபோதும் ஆனால், அவர்கள் தங்களை முகாமில் இருந்து துரத்தினார்கள் அவ்வேளையிலே தம்மை அவர்கள் வாகனத்தில் கடத்தி சென்றனர்.

கடற்படையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டு , தமக்கு அடைக்கலம் கொடுத்து இருந்தால் , தனது கணவரின் உயிர் பிரிந்திருக்கது. தனது கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு விதத்தில் காரணம் என தெரிவித்தார்.

அதேவேளை , கடற்படையினர் அடைக்கலம் கொடுக்காது இருந்தாலும் , தமது முகாமிற்கு அருகில் வாகனத்துடன் நின்ற கும்பலை துரத்தி விட்டு, இவர்களை அனுப்பி வைத்திருக்கலாம். அல்லது வட்டுக்கோட்டை காவற்துறையினருக்கு தகவல் வழங்கி இருக்கலாம். கடற்படையின் கண் முன் இருவரை வாகனத்தில் சென்றவர்கள் கடத்தி சென்ற போதும் கடற்படையினர் அதனை தடுக்கவோ , கடத்தல் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவற்துறையினருக்கு தகவல் வழங்காமை இருந்தமை கடற்படை மீதும் தங்களுக்கு சந்தேகம் வருகிறது என உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More