Home இலக்கியம் தமிழரசுக் கட்சியின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

தமிழரசுக் கட்சியின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

by admin

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவிற்கு எதிராக,திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருந்த கட்டாணை உத்தரவு, மீண்டும் ஜூலை19 ந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வழக்கு நேற்று (31.05.24)ஆம் திகதி மீண்டும் மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில்,எதிராளிகள் மற்றும் வழக்காளி ஆகியோருக்கிடையில் வழக்கை,சமரசமாக இருதரப்பு உடன்பாட்டுடன் முடிவுக்கு கொண்டுவர இணக்கம் காணப்பட்ட போதும்,அனைத்து எதிராளிகள் மற்றும் வழக்காளியின் உடன்பாட்டிற்கான,எழுத்து பூர்வ சமர்ப்பணங்களை மன்றிற்கு முன் வைப்பதற்கு கால அவகாசம் இரு தரப்பாலும் கோரப்பட்டது. இந்நிலையில் வழக்கு ஜூலை19 ந் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More