Home இலங்கை சுவாமிப் படங்களை அகற்றிய  யாழ்.வலய கல்விப் பணிப்பாளருக்கு எதிராக   போராட்டம்

சுவாமிப் படங்களை அகற்றிய  யாழ்.வலய கல்விப் பணிப்பாளருக்கு எதிராக   போராட்டம்

by admin

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிமனையில் இருந்த சைவக்கடவுள்களின் திருவுருவப்படங்களை அகற்றிய கல்விப் பணிப்பாளர் பிறட்லீயை உடனடியாக யாழ் கல்வி வலயத்தில் இருந்து வெளியேற்றுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிவசேனையின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண வலையக் கல்விப் பணிப்பாளராக கடந்த வாரம் பொறுப்பேற்ற பிரட்லீ தனது அலுவலகத்தில் இருந்த சைவக்கடவுள்களின் திருவுருவ படங்களை அகற்றினார்.   சுவாமி படங்கள் அகற்றப்பட்டமை அலுவலகத்தில்  கடமையில் இருந்த இந்து சமய உத்தியோகஸ்தர்களிடையே  கடும் அதிருப்தி நிலை காணப்பட்டதுடன் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தன.
அது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்திய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுவாமி படங்களை மீள உரிய இடங்களில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையிலையே சிவசேனை அமைப்பினர் வலய கல்வி பணிப்பாளரை யாழ்.கல்வி வலயத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More