Home இலங்கை ஆனைக்கோட்டையில் தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழா!

ஆனைக்கோட்டையில் தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழா!

by admin

பிரித்தானிய சமூக முன்னேற்ற மையத்தின் மரபுரிமை அலகின் நிதி பங்களிப்புடனும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடனும் ஆனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் யாழ். பொதுசன நூலகத்திற்கு அருகில் உள்ள யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை (20.07.24 மாலை நடைபெற உள்ளது .

யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பரம புஷ்பரட்ணத்தின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சத்திர சிகிச்சை பேராசிரியரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் மருத்துவ பீடாதிபதியும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உப தலைவருமாகிய ரவிராஜ் கலந்து கொள்ள உள்ளார்.

குறித்த நிகழ்வில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், துறைசார் வல்லுனர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More