Home இலங்கை குழந்தையை கைவிட்டு காதலுடன் சென்ற குடும்ப பெண் – பெண்ணும் காதலனும் விளக்கமறியலில்!

குழந்தையை கைவிட்டு காதலுடன் சென்ற குடும்ப பெண் – பெண்ணும் காதலனும் விளக்கமறியலில்!

by admin

தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு, சட்டவிரோத காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய குடும்ப பெண்ணையும், காதலனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலுடன் ஊரை விட்டு சென்று இருந்தார்.

இது தொடர்பில் கணவனால் யாழ்ப்பாண காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர் பெண்ணையும், அவரது காதலனான இளைஞனையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற விசாரணைகளை அடுத்து இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More