Home உலகம் பேஜர்கள் வெடித்ததில் நாடாளுமன்ற உறுப்பினாின் மகன் உட்பட ஒன்பது பேர்  பலி

பேஜர்கள் வெடித்ததில் நாடாளுமன்ற உறுப்பினாின் மகன் உட்பட ஒன்பது பேர்  பலி

by admin
 

லெபனானில் கையடக்க கருவியான பேஜர்கள் வெடித்ததில் நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவாின் மகன் உட்பட ஒன்பது பேர்  உயிாிழந்துள்ளதுடன்  2,700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனா்.  இதேவேளை இந்த அசம்பாவிதத்துக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பினா் குற்றம் சாட்டியுள்ளனர்.

லெபனானில் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா  அமைப்பினா்  தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களை பயன்படுத்தி வருகின்ற நிலையில் தெற்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலர் வைத்திருந்த கையடக்க பேஜர்கள் வெடித்ததை தொடர்ந்து  ஹிஸ்புல்லா அமைப்பினா் வைத்திருந்த பேஜர்களும் தொடர்ச்சியாக வெடித்தன.

இதில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் மருத்துவர்கள் என 2,700 பேர் காயமடைந்ததாகவும் ஒன்பது பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு ஒக்டோபர் முதல்  இஸ்ரேலுடன் போர் நடத்திவரும் ஹிஸ்புல்லா அமைப்பு  , இந்த சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறல் என   குற்றம் சாட்டியுள்ளது

இதேவேளை பேஜர்கள் வைத்திருப்பவர்கள் உடனடியாக அவற்றை வெளியே வீசி எறிய வேண்டும் எனவும் அதனை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவித்த  லெபனான் , நாடு முழுவதும் அவசர நிலையை லெபனான்  அறிவித்துள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More