Home இலங்கை யாழ். கலாசார மத்திய நிலையத்தினை பராமரித்தல் தொடா்பில் கலந்துரையாடல்

யாழ். கலாசார மத்திய நிலையத்தினை பராமரித்தல் தொடா்பில் கலந்துரையாடல்

by admin

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தினை பராமரித்தல் மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்டு உள்ள யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தினை பராமரித்தல் மற்றும் கலாசார நிகழ்வுகளை முன்னெடுத்தல் தொடர்பாக ஆராயப்பட்டது.
அதேவேளை கலை, கலாசார, நிகழ்வுகளை நடத்துதல், உரியவாறு ஒழுங்கமைத்தல் தொடர்பிலும், சமூகத்தின் பாவனைக்கு விடுதல் மற்றும், கலாசார மத்திய நிலையத்தினை தொடர்து இயங்குநிலையில் வைத்திருத்தல் தொடர்பிலும், கலாசார மத்திய நிலையத்தினை உரிய திணைக்களங்களிடம் ஒப்படைத்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
  குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், இந்திய துணைத்தூதர் ஶ்ரீமான் சாய் முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் பதில் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், யாழ் மாநகர சபை ஆணையாளர், கலைத்துறை சார்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More