Home இந்தியா ஏ.ஆர் ரஹ்மானும் மனைவியும் பிாிகின்றனா்

ஏ.ஆர் ரஹ்மானும் மனைவியும் பிாிகின்றனா்

by admin

 

இசைப் புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, தனது கணவரை பிரியவுள்ளதாக அறிவித்துள்ளார். இன்று (19) இரவு, பத்திரிகையாளர்களுக்கு  அனுப்பியுள்ள ஒரு அறிக்கையில் இந்த   தகவலை அவா்  வெளியிட்டுள்ளார்.  இவா்களுக்கு திருமணமாகி 29 ஆண்டுகள் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஏஆர் ரஹ்மானின் மனைவி சாயிரா பானு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்  “திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாயிரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். உணர்ச்சிப்பூர்வ அழுத்ததற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை  ஒருவா் ஆழமாக  நேசித்தாலும் கூட சிரமம் மற்றும் பதற்றங்கள் இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியதாக  இருவரும் அறிந்துள்ளனர்.

இந்த இடைவெளியை நீக்க யாராலும் பாலம் போல் செயல்பட முடியாது. இதனால் இந்த முடிவை வலி மற்றும் வேதனையுடன் சாயிரா பானு எடுத்துள்ளார். இந்த இக்கட்டனா நேரத்தில் சாயிரா பானு பொதுமக்களிடம் இருந்து  தனிமனித நலனகளை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

‛ஒஸ்கர்’ விருது வென்ற தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏஆர் ரஹ்மான் தமிழ் மட்டுமின்றி இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More