Home இலங்கை போலியான விசா மூலம் கனடா செல்ல முயன்ற யாழ் தம்பதி கைது

போலியான விசா மூலம் கனடா செல்ல முயன்ற யாழ் தம்பதி கைது

by admin

 

போலியான கனடா விசாக்களைப் பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடாவுக்குச்  செல்ல முயன்ற  ஒரு  தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட  இருவரும் யாழ்ப்பாணப் பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதிகள் எனவும் கணவனுக்கு 40 வயது எனவும்  மனைவிக்கு 34 வயது எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் நரிட்டாவிற்கு நேற்று திங்கட்கிழமை (17) இரவு 8.35 மணிக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-454  என்ற  விமானத்தில் ல் ஏறுவதற்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனா்.

இதன்போது, ​​அவர்கள் விமான அனுமதிக்காக சமர்ப்பித்த ஆவணங்களில் போலியான கனடா விசாக்கள் இருந்ததாக சந்தேகித்த விமானப் போக்குவரத்து அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் அவற்றை ஒப்படைக்க   நிலையில் அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More