Home உலகம் வழங்கிய உதவிகளுக்கீடாக உக்ரைனில் தாதுக்களை எடுத்துக்கொள்ளவுள்ள அமெரிக்கா

வழங்கிய உதவிகளுக்கீடாக உக்ரைனில் தாதுக்களை எடுத்துக்கொள்ளவுள்ள அமெரிக்கா

by editorenglish

ரஸ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையேயான போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஸ்யா, உக்ரைன் இடையேயான போர் 1 ஆயிரத்து 97வது நாளாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்தப் போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சித்து வருகிறார். மேலும், போர் நிறுத்தத்திற்கு உக்ரைன்  ஜனாதிபதி செலன்ஸ்கி தடையாக இருப்பதாக  கூறி வரும் டிரம்ப்  செலன்ஸ்கியை சர்வாதிகாரி என்றும் கூறியுள்ளார். இந்தப் போருக்கு உக்ரைன்தான் காரணம் என்றும் டிரம்ப் விமர்சித்து வருவதனால், உக்ரைன், அமெரிக்கா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்தப் போரில் உக்ரைனுக்கு வழங்கிய 180 பில்லியன் ள அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள ராணுவ உதவியினை  திருப்பித்தருமாறு  வலியுறுத்தி வருவம்   அமெரிக்கா   இந்த உதவிக்கு ஈடாக உக்ரைனில் உள்ள மிகவும் அரிதான தாதுக்களை எடுத்துக்கொள்ளவும்   திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா, உக்ரைன் இடையே விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, உக்ரைனில் இருந்து ரஸ்ய படைகளை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்துள்ளது.

இந்நிலையில்,அமெரிக்காவுக்கு சென்றுள்ள  பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவல் மக்ரோன்   வெள்ளைமாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது உக்ரைன், ரஸ்யா போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசித்தனர்.

இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி டிரம்ப் ரஸ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையேயான போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக தெரிவித்தார். மேலும்   ஐரோப்பிய அமைதிப்படையினரை உக்ரைனில் நிலைநிறுத்த ரஸ்ய ஜனாதிபதி  புதின் சம்மதிப்பார் என நம்புவதாகவும் தொிவித்துள்ளா்.

மேலும் ரஸ்யா, உக்ரைன் இடையேயான போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. போர் இன்னும் ஒருவாரத்திற்குள்ம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறேன். உக்ரைன் ஜனாதிபதி  செலன்ஸ்கி விரைவில் அமெரிக்காவுக்கு வருவார். உக்ரைனில் உள்ள அரியவகை தாதுக்களை எடுத்துக்கொள்ள அமெரிக்காவுக்கு அனுமதியளிக்கும் ஒப்பந்தத்தில் உக்ரைன் விரைவில் கையெழுத்திடும் என எதிபார்க்கிறேன்’ என்றார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More