Home பிரதான செய்திகள் சம்பியன்ஸ் கிண்ணத்தினை இந்தியா கைப்பற்றியது

சம்பியன்ஸ் கிண்ணத்தினை இந்தியா கைப்பற்றியது

by admin

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரினை வென்று  இந்தியா சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற   இறுதிப் போட்டியில் நி யூசிலாந்தினை   வென்று    இந்தியா மூன்றாவது தடவையாக   சம்பியனாகியது.

இப்போட்டியில்  முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் டரைல் மிற்செல்  63 (101), மிஷெல் பிறேஸ்வெல் ஆட்டமிழக்காமல் 53 (40), றஷின் றவீந்திர 37 (29), கிளென் பிலிப்ஸ் 34 (52) ஓட்டங்களைப் பெற்றனர்.

இதனையடுத்து   252 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்குடன்  துடுப்பெடுத்தாடிய இந்தியா, அணித்தலைவர் றோஹித் ஷர்மா 76 (83), ஷ்ரேயாஸ் ஐயா் 48 (62), லோகேஷ் ராகுல் ஆட்டமிழக்காது 34 (33), ஷுப்மன் கில்31 (50), அக்ஸர் பட்டேல் 29 (40)  என  49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து  வெற்றியிலக்கை அடைந்தது  போட்டியின் நாயகனாக ஷர்மா தெரிவு செய்யப்பட்டாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More