Home இலங்கை மட்டக்களப்பு – முல்லைத்தீவில் விபத்துகள் – யாழ் இளைஞா்கள் உயிாிழப்பு

மட்டக்களப்பு – முல்லைத்தீவில் விபத்துகள் – யாழ் இளைஞா்கள் உயிாிழப்பு

by admin

 

மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவில் இடம்பெற்ற வீதி விபத்துகளில்  யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞா்கள்  உயிரிழந்துள்ளாளனா். மட்டக்களப்பில் இடம்பெற்ற  விபத்தில் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வீதியை கடக்க முற்பட்ட வேளை ஹயஸ் வாகனம் மோதியதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவத்தினை அடுத்து , ஹயஸ் சாரதியை கைது செய்துள்ள மட்டக்களப்பு  காவல்துறையினா்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

 இதேவேளை முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாவாந்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த மதுசன் குணசிங்கம் (வயது 28) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த
நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More