Home இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இன்று முதல் வேட்புமனுக்கள் ஏற்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இன்று முதல் வேட்புமனுக்கள் ஏற்பு

by admin

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்  இன்று முதல் எதிா்வரும்  20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை   ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில்  வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.

இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தபால் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, தங்கள் நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இன்று ஆரம்பமாகியுள்ள சாதாரண தரப் பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வேட்புமனுக்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், வேட்பாளர்களிடம் கோரியுள்ளார்.

Spread the love

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More