இன்று(15) அதிகாலை எல்பிட்டிய, குருந்துகஹ நகரில் முச்சக்கர வண்டி ஒன்று வானுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 06 வயது சிறுமி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.. அம்பலாங்கொடையிலிருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் வந்த வான் மீது நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநா், அதில் பயணித்த இரு பெண் பயணிகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் காயமடைந்த நிலையில் அவா்கள் .எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனாஹ இதில் காயமடைந்த ஒரு பெண் குழந்தை உயிரிழந்துள்ளதுடன் ஏனையவா்கள் தொடா்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 06 வயதான சிறுமி பிடிகல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக வானின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் . சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.