160
யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் இன்றையதினம் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்ட காவல்துறைப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இரு இளைஞர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களின் உடமையில் இருந்து 620 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love