251
கிரீன்லாந்து (Greenland) பகுதியில் மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கட்டமைப்பு அதிகரித்தால், அதற்குப் பதிலடியாக ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டோம் என்று ரஷ்யா இன்று அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergey Lavrov), “கிரீன்லாந்தில் ரஷ்யாவை இலக்கு வைத்து ராணுவ தளங்களோ அல்லது ஆயுதக் கட்டமைப்புகளோ உருவாக்கப்பட்டால், அதற்கு இணையான ‘ராணுவ-தொழில்நுட்ப’ (military-technical) எதிர் நடவடிக்கைகளை ரஷ்யா எடுக்கும்” என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை இணைக்க விரும்புவதாகத் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து, அங்கே பாதுகாப்புச் சூழல் மாறியுள்ளது. சமீபத்தில் ‘Arctic Sentry’ என்ற புதிய ராணுவத் திட்டத்தை நேட்டோ (NATO) தொடங்கியுள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் சிறிய ராணுவக் குழுக்கள் ஏற்கனவே கிரீன்லாந்தின் தலைநகரான நூக் (Nuuk) பகுதிக்கு வந்துள்ளன. இது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மாஸ்கோ கருதுகிறது.
கிரீன்லாந்து ஒரு தன்னாட்சி பெற்ற டேனிஷ் (Denmark) மாகாணம் என்றாலும், அதன் புவிசார் இருப்பிடம் ரஷ்யாவின் வடக்கு எல்லைக்கு மிக அருகில் இருப்பதால், இப்பகுதி உலக நாடுகளுக்கு இடையிலான புதிய அதிகாரப் போட்டியின் களமாக மாறியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது ஆர்க்டிக் பகுதியிலும் பதற்றம் அதிகரிப்பது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
________________________________________
Spread the love

