Home இலங்கைகொழும்பு ஜிந்துப்பிட்டி யில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு-முசலி பண்டாரவெளி வெள்ளிமலை  பகுதியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு.

கொழும்பு ஜிந்துப்பிட்டி யில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு-முசலி பண்டாரவெளி வெள்ளிமலை  பகுதியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு.

by admin

 

கொழும்பு ஜிந்துப்பிட்டி யில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு-முசலி பண்டாரவெளி வெள்ளிமலை  பகுதியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு.

கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நேற்றிரவு (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

-உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த முஜாஹித்  முஹம்மது சஹ்ரின்  (வயது-20) என தெரிய வந்துள்ளது.

குறித்த இளைஞர்  கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும் ,சம்பவ தினம் சிகை அலங்கரிப்பு (தலை முடி வெட்ட) சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவற்துறையினர்  தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 20 வயதான மன்னார்   முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி   வெள்ளிமலை பகுதியை    சேர்ந்த   இளைஞர்   உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

#Colombo #Jinthupitiya #ShootingNews #Mannar #Musali #Tragedy #SriLankaNews #CrimeNews #JusticeForSahrin #BreakingNewsLK

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More