Home இலங்கை“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு: குருக்கள்மடம் புதைகுழியில் தீவிரமடையும் தடயவியல் ஆய்வு!”

“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு: குருக்கள்மடம் புதைகுழியில் தீவிரமடையும் தடயவியல் ஆய்வு!”

by admin

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா விளையாட்டு மைதானத்திற்கு அருகில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை (இன்று) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, நீதவான் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவினர் இந்த முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  கடந்த காலங்களில் நிலப்பகுதியைச் சமப்படுத்தும் பணிகளின் போது மனித எச்சங்கள் தென்பட்டதை அடுத்து, இந்தப் பகுதி மனிதப்புதைகுழியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அகழ்வின் மூலம் கண்டெடுக்கப்படும் எச்சங்கள் டிஎன்ஏ  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது தகவல்களுடன் ஒப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குருக்கள்மடம் பகுதியில் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வுப் பணிகள், கடந்த காலப் போர்க்காலச் சம்பவங்கள் குறித்த பல உண்மைகளை வெளிக்கொணரலாம் என்பதால் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றது.

அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, தரை மட்டத்திலிருந்து சில அடி ஆழத்தில் மனித எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எலும்பு எச்சங்களுடன் சிதைவடைந்த நிலையில் சில துணித் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன, இவை தடயவியல் சோதனைக்காகச் சேகரிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக விவேகானந்தா விளையாட்டு மைதானத்தை ஒட்டிய குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் அகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட ஒவ்வொரு எச்சமும் விசேட தடயவியல் நிபுணர்களால் இலக்கமிடப்பட்டு, நிழற்படம் எடுக்கப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட எச்சங்கள் அனைத்தும் நீதிமன்ற பாதுகாப்பின் கீழ் கொண்டு செல்லப்படவுள்ளன. இவை முறையான ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, இவை எத்தனை நபர்களுடையது மற்றும் எந்தக் காலப்பகுதியைச் சேர்ந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்

#Kurukkalmadam #MassGraveExcavation #Batticaloa #ForensicInvestigation #HumanRights

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More