Home உலகம்ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் – 400போ் பலி -250போ் காயம்

ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் – 400போ் பலி -250போ் காயம்

by admin
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில்,   400 பேர் உயிரிழந்துள்ளதுடன் 250 போ் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை (  மார்ச் 16) இரவு 9.00 மணியளவில்  இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக தொிவிக்கப்படுகின்றது.   மருத்துவமனையின் பெரும்பகுதி தரைமட்டமாக்கப்பட்டுள்ளதோடு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளே அதிகளவில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 
மருந்து பழக்கத்திலிருந்து மீள்வோருக்கான மருத்துவமனை மீதே  பாகிஸ்தான் வான்தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் (தாலிபான் அரசு) குற்றம் சாட்டுகிறது. இதை மறுத்துள்ள  பாகிஸ்தான்   👉 “நாங்கள் பொதுமக்கள் இடங்களை தாக்கவில்லை, பயங்கரவாத முகாம்களை மட்டும் குறிவைத்தோம்” என தொிவிக்கின்றது. 

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்துக் கடும் கவலை வெளியிட்டுள்ளன.  பிப்ரவரி 2026 முதல்   பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே கடும் பதற்றம் நிலவுகின்றது.  எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர்   “பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டி வருகின்றன

#AfghanistanPakistanWar #KabulAirstrike #HospitalBombing #GlobalSecurity

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More