139
குவைத் நோக்கில் இருந்து ஏவப்பட்ட ரொக்கெட் தாக்குதலுக்குப் பின்னர், ஈராக்கின் பஸ்ரா நகரில் உள்ள குவைத் தூதரக (Consulate) வளாகம் மீது போராட்டக்காரர்கள் உட்புகுந்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி அறிக்கைகளின் படி, குர் அல்-சுபைர் (Khor al-Zubair) பகுதிக்கு அருகில் நிகழ்ந்த ரொக்கெட் தாக்குதலில் குறைந்தது மூவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுவதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல் குவைத் திசையில் இருந்து நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது; ஆனால் தாக்குதலின் துல்லியமான மூலமும் பொறுப்பும் இதுவரை உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.
இந்த தாக்குதலுக்குப் பின்னர், பஸ்ராவில் உள்ள குவைத் தூதரகத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, தூதரக வளாகத்துக்குள் நுழைந்து சேதப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை “உட்புகுதல் மற்றும் சேதப்படுத்தல்” எனக் கண்டித்துள்ள குவைத் வெளியுறவு அமைச்சகம், தங்களது தூதரகங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது ஈராக்கின் பொறுப்பு என வலியுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிய சில பதிவுகளில் “Consulate” என்பதற்குப் பதிலாக “தூதரகம் (Embassy)” என குறிப்பிடப்பட்டுள்ளதும், தாக்குதல் “குவைத்துக்குள் இருந்து” நடந்ததாக கூறப்பட்டுள்ளதும் உண்மை நிலைக்கு ஒவ்வாததாகக் காணப்படுகிறது.
சர்வதேச செய்தி நிறுவனங்களின் தகவலின்படி, சம்பவம் பஸ்ராவில் உள்ள “தூதரகம் (Consulate)” தொடர்புடையதாகவும், ராக்கெட்டுகள் “குவைத் திசையில் இருந்து” ஏவப்பட்டதாகவும் மட்டுமே உறுதியாகக் கூறப்பட்டுள்ளது.
Spread the love

