Home உலகம்ஈரான் மோதலால் மருந்துப் பொருட்கள் மற்றும் கருத்தடை உறைகளின் விலையில் கடும் உயர்வு!

ஈரான் மோதலால் மருந்துப் பொருட்கள் மற்றும் கருத்தடை உறைகளின் விலையில் கடும் உயர்வு!

by admin
ஈரான் மற்றும் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் (Supply Chain) பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மருந்துப் பொருட்கள் மற்றும் கருத்தடை உறைகளின் (Condoms) விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய கொண்டம் தயாரிப்பு நிறுவனமான Karex, ஈரானியப் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடான போக்குவரத்துத் தடைகள் காரணமாக, உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் உலக சந்தையில் இவற்றின் விலை 20% முதல் 30% வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கான உயிர் காக்கும் மருந்துகளின் விலை ஈரானில் பல மடங்கு அதிகரித்துள்ளதோடு, உலக நாடுகளுக்கான மருந்து விநியோகத்திலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
மருந்துத் தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களுக்கான செலவு அதிகரித்துள்ளமை இதற்கு முக்கிய காரணமாகும்.
காப்பீட்டுக் கட்டண உயர்வு மற்றும் நீண்ட கடல் வழிப் பயணங்கள் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் நுகர்வோரைச் சென்றடைவதில் சிக்கல் நீடிக்கிறது.
இந்த விலை உயர்வு வளரும் நாடுகளில் உள்ள பொதுச் சுகாதாரத் திட்டங்கள் மற்றும் மனிதாபிமான உதவி அமைப்புகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More