Home இலங்கைபாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு:

பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு:

அதிநவீன கைத்துப்பாக்கி மீட்பு!

by admin
இலங்கையில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரான ‘கரந்தெனிய சுத்தா’ என்பவரது சகோதரர் ‘கரந்தெனிய ராஜு’ என்பவருக்குச் சொந்தமான வீட்டில் காவற்துறையினர் விசேட சோதனையை முன்னெடுத்தனர். இதன்போது, அவரது வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன 9 மில்லிமீற்றர் (9mm) ரக கைத்துப்பாக்கி ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 15 தோட்டாக்களும் காவற்துறை மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் கிடைத்த தகவலுக்கு அமைவாகவே இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த துப்பாக்கியானது, கரந்தெனிய ராஜுவினால் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கொலைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என காவற்துறையினர் பலமான சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விஞ்ஞானபூர்வ ஆய்வுகளுக்காகவும், ஏனைய குற்றச்செயல்களுடன் இதற்குள்ள தொடர்பு குறித்தும் காவற்துறை மத்திய குற்ற விசாரணைப் பணியகம் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More