Home இலங்கை கொச்சிக்கடை குண்டுதாரி- தந்தையின் விளக்கமறில் நீடிப்பு!

கொச்சிக்கடை குண்டுதாரி- தந்தையின் விளக்கமறில் நீடிப்பு!

by admin

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவலயத்தில் குண்டு தாக்குதலை மேற்கொண்ட அலவுதீன் அஹமட் முவார் என்பவரின் தந்தையை எதிர்வரும் 2 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (20.01.21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹாலினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த குண்டுதாரியின் தந்தையான அஹம் லெப்பே அலவுதீன் எனும் நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை கவனத்திற் கொண்ட நீதிபதி குறித்த நபரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More